பிரிஸ்பேனில் உள்ள தி கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்ததை கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
மேகமூட்டமான சூழல் மற்றும் அதிக மழை காரணமாக பச்சை நிற ஆடுகளம் இருந்தபோதிலும், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டர் மேத்யூ ஹைடன் ஆகியோர் இந்த உத்தியை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
“பாட் கம்மின்ஸ் அதை (டாஸ்) இழந்ததில் முற்றிலும் மகிழ்ச்சியடைந்ததாக நான் நினைக்கிறேன்.” என மைக்கேல் வாகன் ஃபாக்ஸ் கிரிக்கெட்டிடம் கூறினார்