இந்து சமயத்தில் பல்வேறு சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. அதில் கையில், காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதும் ஒன்று.
நம்மில் பலர் ஏன் காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்கிறோம் என்பதே தெரியாமல் அதை செய்வதுண்டு. காலில் கருப்பு கயிறு கட்டுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி, ஒன்றல்ல மூன்று கிரகங்கள் உங்களுக்கு பலமடையும். சனி, ராகு, கேது கிரகங்கள் பலமடையும். அதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கும்.
சனியின் பலம் கூடும் :
வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் (2022 மே 30) சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய சிறப்பு வழிபாடு செய்வதும், பரிகாரம் செய்வதும், அன்று அவரை மனதில் நினைத்துக் கொண்டு கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வது நல்லது.
இதனால் கண் திருஷ்டி ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். சனியின் தீய பார்வை குறையும்.
கருப்பு நூல் அணிவது பேஷன் அல்ல
காலில் கறுப்பு நூல் அணிவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. பல திரைப் பிரபலங்களும் தங்கள் காலில் கருப்பு நூல் அணிந்துள்ளனர். அவர்களில் சாரா அலி கானும் ஒருவர்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, காலில் கருப்பு நூல் அணிவதன் மத அம்சம் என்னவென்றால், இந்த எளிய தோற்றமளிக்கும் நூல் எல்லா வகையான எதிர்மறை சக்திகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கிறது.
ராகு மற்றும் கேது பலப்படும்
சனியின் நற்பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், ராகு, கேது எனும் நிழல் கிரகங்களின் நற்பலனைத் தருவதாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தால், உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதால் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த எதிரி கிரகத்துடன் இணைந்தாலும் உங்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு நூல் அணிவது உங்களுக்கு அதுபோன்ற பாதிப்புகள் குறைந்து, நல்ல பலன் தருவதாக இருக்கும்.
ராகு கேது தோஷம், தீங்குகளை குறைக்க எளிய ஜோதிட பரிகாரம் இதோ
எப்போது, எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும்
கருப்பு நூல் எப்போதும் சனிக்கிழமை அணிய வேண்டும்.
கருப்பு கயிறை சனி பகவான் அல்லது பைரவர் கோவிலுக்கு எடுத்துச் சென்று கட்டிக் கொள்ளலாம். அல்லது அங்கே விற்கும் கயிறை கூட வாங்கி கட்டிக் கொள்ளலாம்.
சனியின் பீஜை மந்திரத்தை 21 முறை கறுப்பு நூல் அணிந்த பிறகு உச்சரிப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
உங்கள் காலில் கருப்பு கயிறு அணிந்தால், உங்கள் கழுத்தில் சிவப்பு அல்லது மஞ்சள் நூலை அணிய வேண்டாம். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
கருப்பு கயிறு கட்டும் போது அந்த கயிற்றில் 9 முடிச்சுகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டிக் கொள்வது நல்லது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.