ஏப்ரல் 30 சனிக்கிழமை வரக்கூடிய அமாவாசை அன்று இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. நள்ளிரவு 2.11 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது.
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணங்கள் ஏற்படுவது எந்த பகுதியில் தெரிகிறதோ அந்த பகுதிக்கு மட்டும் தான் தோஷம் என கணக்கில் கொள்ளப்படுகிறது.
சூரிய கிரகணம் என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று. இருப்பினும் நவகிரகங்களின் தலைவனான சூரியன், சூரிய கிரகணத்தின் போது சிறிது நேரம் பிரகாசம் மறைக்கப்படுவதால், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் ஏற்படும்.
பொதுவாக கிரகணத்தின் போது சுப வேலைகள் செய்யப்படுவதில்லை. மாறாக கிரகண நேரத்தில் நாம் இறை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.
சூரிய கிரகணம் :
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரக்கூடிய நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 30 சனிக்கிழமை வரக்கூடிய அமாவாசை அன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. நள்ளிரவு 2.11 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மே 1 அதிகாலை 4.07 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது.
இரவும் பகலும் திறந்திருப்பதோடு, கிரகணத்தின் போது கூட மூடப்படாத கோயில் எங்கு உள்ளது தெரியுமா?… அட நம்ம ஊருல தாங்க
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் :
நள்ளிரவு 12.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும் நேரத்தில் மேஷ ராசியில் சுக்கிரன் ஆளக்கூடிய பரணி நட்சத்திரம் உள்ளது.
அதனால் மேஷ ராசியினர் அடுத்த 15 நாட்கள் எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம். அதுமட்டுமல்லாமல் சுக்கிர பகவான் ஆளக்கூடிய ரிஷபம், துலாம் ராசியினரும், தனுசு ராசியில் பூராடம் நட்சத்தினரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எங்கெல்லாம் சூரிய கிரகணம் பார்க்க முடியும்?
குறைந்த பட்சம், பகுதி கிரகணத்தைப் பார்க்கும் பகுதிகள்: தெற்கு/தென் மேற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அதில் உள்ள நாடுகள், அட்லாண்டிக், அண்டார்டிகா பெருங்கடல் பக்திகளில் இந்த கிரகணம் பார்க்க முடியும்.
கிரகண தோஷம் ஏற்படுமா?
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணங்கள் ஏற்படுவது எந்த பகுதியில் தெரிகிறதோ அந்த பகுதிக்கு மட்டும் தான் தோஷம் என கணக்கில் கொள்ளப்படுகிறது.
இந்தாண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நள்ளிரவில் ஏற்படுகிறது. அதனால் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. தெரியாத கிரகணத்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
அப்படியே தோஷம் ஏற்பட்டாலும் எளிதாக நாம் தோஷ நிவர்த்தியும் செய்ய முடியும்.
தோஷ நிவர்த்தி செய்வது எப்படி?
கிரகணம் முடிந்ததும், வீட்டை சிறிது கல் உப்பு போட்ட நீரால் துடைக்கவும். அதே போல சிறிது கல் உப்பு, மஞ்சள், தர்ப்பை போட்ட நீரால் நீராடிவிட்டு சூரிய பகவானை வணங்கவும். பின்னர் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, விளக்கேற்றி வழிபடவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.