Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

சரஸ்வதி பூஜை கொண்டாடுவதற்கான காரணமும், வழிமுறைகளும்…

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
October 14, 2021 9:19 am
in ஆன்மீக தகவல்கள்
203
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையானது, சார்தியா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் பல்வேறு வழி முறைகளில் கொண்டாடப்படுகிறது.

இது பன்முகத்தன்மை மற்றும் அதே நேரத்தில் ஒற்றுமையின் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், நவராத்திரி பண்டிகை துர்க்கை அம்மனின் 9 அம்சங்களை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகிறது.

19 வயது இளைஞனின் உயிரை பறித்த ‘வேகம்’

மேலும் நவராத்திரியின் இறுதி நாள் கொண்டாட்டமான தசரா, தீமைக்கு எதிரான நல்லதொரு வெற்றியை குறிக்கிறது. அதாவது துர்கா தேவி அரக்கனை வதம் செய்து மக்களுக்கு நன்மை செய்ததை குறிக்கிறது.

தென்னிந்திய மாநிலங்கள் கேரளா, தமிழ்நாடு, நவராத்திரியின் கடைசி நாளான 9 வது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை, நவராத்திரியானது முப்பெரும் தேவியரை பூஜிக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி மற்றும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவர்.

சரஸ்வதி தேவி அறிவு, இசை, கலை மற்றும் ஞானத்தின் தெய்வ ரூபமாக கருதப்படுகின்றனர். சரஸ்வதி தேவியானவள் மும்மூர்த்திகளின் ஒரு பகுதியை முப்பெரும் தேவிகளை உருவாக்குகிறார். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், புத்திசாலியாகவும், அறிவாற்றலுடனும் விளங்க தெய்வத்தின் ஆசிகளை நாடுகின்றனர்.

அரை குறை ஆடையுடன் அஜித் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்!

இந்து புராணங்களின்படி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி என்று அறியப்படுகிறது. எனவே, நவராத்திரியின் கடைசி நாளில், அம்மன், மகா சரஸ்வதியாக வெளிப்படுவார் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, சரஸ்வதி பூஜை அக்டோபர் 12 ஆம் தேதி வருகிறது.

சரஸ்வதி தேவியை வழிபடும் முறைகள்:

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான சரஸ்வதி பூஜையின் போது,​​மக்கள் சரஸ்வதி சிலை அல்லது படத்திற்கு பூஜை செய்கிறார்கள். நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, வீடுகளில் ‘கொலு’ வைக்கும் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்து வருகிறது. கடவுள், தெய்வங்கள், விலங்குகள், பறவைகள், ஆன்மீக குருகள் மற்றும் கலைப்படைப்புகளின் சிறு உருவங்களை 5, 7, 9 ஆகிய ஒற்றை இலக்க படிகளை அமைத்து காட்சிக்கு வைப்பர்.

வெள்ளை நிற பொருட்கள்

சரஸ்வதி தேவிக்கு வெண்ணிறம் மிகவும் உகந்தது. எனவே, வெள்ளை புடவை அணிந்து, வெண்ணிற அன்னப்பறவையை ‘வாகனமாக’ கொண்டிருக்கிறார். அவளை வணங்குவதற்கான விருப்பமான வழி என்றால், பெரும்பாலும் வெள்ளை பொருட்களைப் பயன்படுத்துவதே ஆகும்.

வெள்ளை நிற பூக்கள்

ஒவ்வொரு நாளும், வெள்ளை பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை, வெள்ளை நிற மலர்கள், வெள்ளை நிற ரங்கோலி, வெள்ளை எள், அரிசி மற்றும் தேங்காயுடன் தயாரிக்கப்பட்ட ‘நைவேத்தியம்’ வழங்கி சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பக்தர்கள் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து தேவிக்கு பூஜை செய்கிறார்கள். வெள்ளை நிற அல்லி சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மலர் என்று நம்பப்படுகிறது.

புத்தகம் மற்றும் எழுது பொருட்கள்

மூன்று நாள் சரஸ்வதி பூஜையின் போது மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சரஸ்வதி தேவிக்கு முன்பு புத்தகங்கள், எழுதுபொருட்களை வைத்து வழிபடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பதாம் நாளான கடைசி நாளில் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதத்துடன் பூஜைக்கு வைத்த பொருட்களை எடுத்து உபயோகிக்கின்றனர்.

சரஸ்வதி பூஜை நேரம்:

அக்டோபர் 11 திங்கட்கிழமை: சரஸ்வதி ஆவாஹனைக் குறிக்கிறது.

அக்டோபர் 12: காலை 11.27 மணி: பூர்வ ஆஷாத நட்சத்திரம் தொடங்குகிறது.

அக்டோபர் 13: காலை 10.19 மணி: பூர்வ ஆஷாத நட்சத்திரம் முடிவடைகிறது.

அக்டோபர் 13 புதன்கிழமை: சரஸ்வதி பலிதானைக் காண்பர்.

அக்டோபர் 14 வியாழக்கிழமை: சரஸ்வதி விசர்ஜனத்தைக் காண்பர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: saraswati puja 2021 datesaraswati puja shubh muhuratsaraswati puja significancesaraswati puja vidhi during navratriசரஸ்வதி பூஜைசரஸ்வதி பூஜை 202 தேதிசரஸ்வதி பூஜைக்கான சுப முகூர்த்தம்சரஸ்வதி பூஜைக்கான பூஜை நேரம்சரஸ்வதி பூஜையின் முக்கியத்துவம்
ShareTweetSendShare

Related News

வீட்டு பூஜை அறையை

வீட்டு பூஜை அறையை இப்படி வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் இதோ!

April 10, 2025 12:10 pm
மாசி மகம்

மாசி மகம்: புனித நீராடினால் இத்தனை நன்மைகளா!

March 13, 2025 7:09 am
காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு: சுமங்கலி வரம் பெற இப்படி வழிபடுங்க

March 13, 2025 7:06 am
மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

March 1, 2025 6:54 am
குபேரன் சிலை

குபேரன் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

February 18, 2025 5:51 pm
Today Rasi Palan

Today Rasi Palan – இன்றைய ராசிபலன் : 16 ஆகஸ்ட் 2024

August 16, 2024 6:47 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist