இந்துக்களின் வீடுகளில் முக்கிய அறையாக இருப்பது பூஜை அறை தான். வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.
பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. பூஜை அறையில் நாம் வைக்கும் பஞ்சபாத்திரம் தண்ணீரை தினமும் மாற்றவேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
இவ்வாறு இந்த தண்ணீரை தினமும் மாற்றலாம் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். முடிந்தவரை தினமும் மாற்றுவது என்பது மிகவும் நல்லதாகும்.
அதுபோல ஒரு சிலர் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி பூஜை செய்த பின்னர் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இதிலும் சந்தேகம் இருக்கிறது.
அசைவம் சாப்பிடும் நாட்களில் எவ்வாறு விளக்கு ஏற்றுவது என்று. ஒரு சிலர் அசைவத்தை ஏற்றுக்கொள்ளும் கடவுள்களை குலதெய்வமாக கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்கள் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் முகம், கை, கால் மட்டும் கழுவிக்கொண்டு தீபம் ஏற்றலாம்.
அதுபோல தினமும் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கின் திரிகளை மாற்ற வேண்டுமா அல்லது அதே திரியில் விளக்கேற்ற வேண்டுமா என்ற சந்தேகமும் இருக்கிறது.
இந்த திரிகளை தினமும் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்றிக்கொள்ளலாம்.
இந்த திரிகளைப் ஒன்றாக சேர்த்து வைத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் உள்ளவர்களை சுற்றிப் போடும் பொழுது அந்த கற்பூரத்தில் இந்த திரிகளையும் சேர்த்து எரித்து விட்டால் திருஷ்டி கழிந்தது என்று அர்த்தமாகும்.