Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home ஆன்மீக தகவல்கள்

60 அடி உயர சுயம்பு லிங்கம் கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 16, 2022 9:40 am
in ஆன்மீக தகவல்கள்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும்.

ராமாயண இதிகாசத்தில் இடம் பிடித்திருக்கும் நபர்களில் முக்கியமானவர், சுசேணர். இவர் வானர அரசனான வாலியின் மாமனார் ஆவார்.

தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சரிவு

இவர் சிறந்த வானர மருத்துவரும் கூட. ராவணனுடனான யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ராவணனின் மகன் மேகநாதன் வீசிய நாகாஸ்திரம் தாக்கி, லட்சுமணன் சுயநினைவை இழந்தான்.

அவனது உயிரைக் காப்பதற்கான மூலிகை , சஞ்சீவி மலையில் இருப்பதாக குறிப்பறிந்து சொன்னது, சுசேணர்தான். ராமருக்கும் ராவணனுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்று, ராவணன் கொல்லப்பட்டான்.

இன்று மின்துண்டிப்பு ஏற்படுமா? மின்சார சபையின் அறிவிப்பு

பின்னர் ராமர், சீதை மற்றும் தனக்கு உதவி புரிந்தவர்களுடன் அயோத்தி புறப்பட்டுச்சென்றார்.

அப்போது சுசேணர், சுமங்சபர்வம் என்ற மலையில் தங்கியிருந்து சிவனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்தார். அவர் அங்கு சென்ற சமயத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு உதவ நினைத்து சுசேணர், அந்தப்பகுதியிலேயே தங்கிவிட்டார். திடீரென்று ராமருக்கு சுசேணரின் நினைவு வர, அவர் எங்கிருக்கிறார் என்று பார்த்து வரும்படி அனுமனை அனுப்பினார்.

அனுமனும் அங்கு இங்கென்று அலைந்து திரிந்து விட்டு, இறுதியாக இந்தப் பகுதிக்கு வந்தார். ஆனால் அங்கு, சுசேணர் சமாதி அடைந்திருந்தார்.

இதனால் வருத்தம் கொண்ட அனுமன், அவர் உடல் மீது மான் தோலை வைத்து மூடி, அதன் மேல் சில மல்லிகை மலர்களை வைத்து விட்டு, ராமரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

ராமரும், சீதை மற்றும் லட்சுமணனுடன் அங்கு வந்து மான்தோலை அகற்றி பார்த்தபோது, அங்கு ஒரு சிவலிங்கம் வளரத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தில் இருந்த புஷ்கரணியில் அனைவரும் நீராடிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சிவலிங்கம் வளர வளர, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் உடல்நலம் பெறத்தொடங்கினர். இங்குள்ள சிவலிங்கம் அந்தப் பகுதி மக்களால் ‘மல்லிகார்ஜூன சுவாமி’ என்று அழைக்கப்படுகிறது.

வடமொழியில் மான் தோலுக்கு ‘அஜினா’ என்று பொருள். மான் தோலும், மல்லிகைப் பூவும் வைக்கப்பட்ட இடத்தில் தோன்றிய சுயம்புலிங்கம் என்பதால் இதற்கு ‘மல்லிகாஜினா சுவாமி’ என்று பெயர் வந்தது.

பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தை, பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வழிபட்டதாகவும், அதனால் இத்தல இறைவனின் பெயர் ‘மல்லிகார்ஜூன சுவாமி’ என்று மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ரவிவலசா கிராமத்தில் இருக்கிறது, திருக்கோவில். இத்தல லிங்கம், சுமார் 60 அடி உயரமும், 10 அடி அகலமும் கொண்ட சுயம்பு லிங்கமாகும்.

இந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னன், சுயம்பு லிங்கத்திற்கு கோவில் அமைக்க எண்ணினான். ஆனால் அவனது கனவில் தோன்றிய ஈசன், தான் கருவறைக்குள் இருக்க விரும்பவில்லை என்றும், என்னை தொட்டு பக்தர்களை சென்றடையும் காற்று, அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் கூறினார்.

இதனால் கோவில் அமைக்கப்படவில்லை.பெரிய தண்ணீர் தொட்டிக்கு இருப்பது போல கீழே சில தூண்களும், சிவலிங்கத்தின் மேற் பகுதியை தரிசிக்கும் வகையில் பக்தர்கள் நிற்கும் வகையில் சுற்று பாதை போன்ற மேற்தளமும் அமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் கோவில் அமைப்பு போன்ற சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: சுயம்பு லிங்கம்
ShareTweetSendShare

Related News

வீட்டு பூஜை அறையை

வீட்டு பூஜை அறையை இப்படி வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் இதோ!

April 10, 2025 12:10 pm
மாசி மகம்

மாசி மகம்: புனித நீராடினால் இத்தனை நன்மைகளா!

March 13, 2025 7:09 am
காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு: சுமங்கலி வரம் பெற இப்படி வழிபடுங்க

March 13, 2025 7:06 am
மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்: 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

March 1, 2025 6:54 am
குபேரன் சிலை

குபேரன் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?

February 18, 2025 5:51 pm
Today Rasi Palan

Today Rasi Palan – இன்றைய ராசிபலன் : 16 ஆகஸ்ட் 2024

August 16, 2024 6:47 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist