வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் பல்வேறு சுற்றுலா இடங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிங்கராஜ வனம் மற்றும் கலாசார முக்கோணத்துடன் தொடர்புடைய இடங்களை தெரிவு செய்து அங்கு திருமணங்களை ஏற்பாடு செய்து திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிகளவான வெளிநாட்டினரை இலங்கைக்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தயாராகி வருகின்றது.
பாதுகாப்பான திருமண இடமாக இலங்கையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருமணத்தில் வித்தியாசமான அனுபவத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து திருமணத்தைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.