இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த கொடுப்பனவு மூலம் 3.2 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை உணவு பெற்றுக்கொள்ள போராடும் மக்கள் உள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.