ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
சர்வ ஜனசக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் நேற்று கட்டுப் பணம் செலுத்தப்பட்டது. இவரது சார்பில் கலாநிதி ஜி வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தினார்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவன் போபகேயும் நேற்றைய தினம் கட்டுப் பணம் செலுத்தியுள்ளார்.