தொழிலதிபர் ஒருவரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி சுமார் 200,000 ரூபாவை மோசடி செய்த யாசகம் பெறும் பெண் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தனது ஏ.டி.எம். அட்டை தவறிவிட்டதாகவும், அதில் இருந்து சுமார் 130,000 ரூபாவை ஒருவர் மோசடி செய்துள்ளதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வடக்கு களுத்துறை, விலேகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த இவர் ஏ.டி.எம் அட்டை தரையில் விழுந்து கிடந்த நிலையில் எடுத்ததாக தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 135,000 ரூபா பெறுமதியான சலவை இயந்திரம், அரிசி குக்கர், ஆடைகள், மதுபானம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உணவு, பானங்கள் வாங்குவதற்காக அவரது கணவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பொலிஸாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. யாசகம் எடுத்தாலும், சந்தேக நபருக்கு 20,000 ரூபா வாடகைக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வீடுகளின் உரிமையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.