அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (15) முன்னிலையாகியுள்ளார்.
காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதற்கமையவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.