இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீனவர்களின் கைதினை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்த இராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் மீள மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.