நீர்கொழும்பு குடபடுவ பிரதேசத்திலும், நீதிமன்ற வீதியிலும், இனந்தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடபடுவ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 65 வயதுடைய நபருடையது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் 4 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, நீர்கொழும்பு நீதிமன்ற வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 75 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர் 4 அடி மற்றும் 5 அங்குல உயரம் கொண்டவர் என நம்பப்படுவதாகவும், கடைசியாக வெள்ளை நிற சாரம் மற்றும் வெள்ளை நீண்ட கை சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.