இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று (25) நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டப்படி வேலை பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேராட்டம் நடைபெறும் என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சங்கத்தின் பொறியாளர்கள் காலை 08:30 முதல் மாலை 4:15 மணி வரை மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மின் துண்டிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின்போது, வேலை நேரத்துக்கு மேலதிகமாக கடமைக்கு வருவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.