Women Engaged In Prostitution To Higher Education :உயர் கல்வியை தொடர செலவழியும் பணத்தை சம்பாதிப்பதற்காக விபசாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
குறித்த யுவதிகளுடன் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் அந்த இடங்களின் முகாமையாளர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலங்கமவில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் நிலையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரவிக்கப்படுகின்றது.
நான்கு இடங்களிலும் சோதனையிடப்பட்டு கைது செய்யப்பட்ட இளம் பெண்களிடம் விசாரணை நடத்திய போது, நிலவும் பொருளாதாரச் சூழலால் உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிக்க வசதியின்றி இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததாக சோதனையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.