தேர்தலுக்கு நிதி பெற்றுக்கொடுக்காமை தொடர்பான யோசனையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வார இறுதிப் பத்திரிகைகள் சிலவற்றில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
அதன்போது, உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக இந்த மாதத்திற்குள் 770 மில்லியன் ரூபாயை பெற்றுத்தருமாறு தேர்தல் ஆணைக்குழு நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.