நாட்டை மீண்டும் திறப்பதற்காக அறிவுறுத்தல் எப்போது வெளியாகும்? என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர் நாடு திரும்பியவுடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவார் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலப் பகுதிகளில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் பொறுப்பின்றி செயற்படும் பட்சத்தில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாடு திறக்கப்பட்டதன் பின்னர், பொதுமக்கள் கடுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.