இரண்டு நாள் விஜயமாக இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை வி.முரளிதரன் சந்திக்க உள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முரளிதரனின் கொழும்புப் விஜயம் அமைந்துள்ளது.
இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் பெப்ரவரி 3 மற்றும் 4ம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.