மேல் மாகாணத்தில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, கொழும்பு-காலி வீதியின் கிராண்ட்பாஸை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இதன் காரணமாக கிராண்ட்பாஸில் உள்ள சென் ஜோசப் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அருகிலிருந்த 6 வீடுகள் சேதமடைந்தன.
இதன் போது குறித்த வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டதாக தெரியவந்துள்ளது.