திறைசேரி உண்டியல்களின் ஏல விற்பனை நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
1,42,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை (02) ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 67 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட கொண்ட 10,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.