சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ரயில் சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை நீக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இந்த நிலையில், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டல்களுக்கு அமைவாக மாகாணங்களுக்குள் ரயில்கள் இயக்கப்படும் அல்லது மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.