சிலாபம் பொலிஸ் பிரிவில் உள்ள தெதுறு ஓயா பாலத்திற்கு அருகே உள்ள தெதுறு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக நேற்று மாலை கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சிலாபம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர் வலஸ்வெவ, கோபேகனே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விசாரணையில், காணாமல் போன நபரும் மேலும் 7 பேரும் குருநாகலில் இருந்து சுற்றுலாவிற்கு வந்ததாகவும், இந்த விபத்து நடந்தபோது தெதுறு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காணாமல் போன நபரை தேடும் பணிகளை சிலாபம் பொலிஸார், கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.