இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விரர் திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், சிறிது காலம் அதன் தலைவராகவும் இருந்தார்.
இதேவேளை, அண்மையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி அப்சரி திலகரத்ன ஆகியோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.