அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்றிரவு கூடியிருந்தது.
இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி வெளியேறுவது குறித்து எவ்வித இறுதி தீர்மானங்களும் எட்டப்படவில்லை.
அது தொடர்பில் இன்றைய தினம் மீண்டும் கூடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.