அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளதுடன், அதில் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அட்டுலுகம பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் இதற்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.