பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அகரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அப்போது, குறித்த பெண்ணின் அலறலை அடுத்து அந்த இடத்திற்கு வந்த தந்தை மகனை சந்தேக நபர் தாக்கியுள்ளார்.
குறித்த நபரினின் கத்திக்குத்து தாக்குதலில் மகன் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை நேற்று கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை சந்தேக நபர் தடியால் தாக்கியுள்ளார்.
அப்போது, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். பஹல்கம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.