நாடு ஓரளவு அரசியல் ஸ்திரத்தன்மை பெற்று வருவதால் பதவி விலக விரும்பவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் என அவர் முன்னர் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பில் ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல அமைச்சரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கிய முன்னேற்றம் காணப்படுவதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எனவே இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது என நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.