அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் கரையோரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கை பின்னணியை கொண்டவர் எனவும் நம்பப்படுகின்றது.
இதனையடுத்து அவரை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
இந்த மரணத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருப்பு ஜீன்ஸ், பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.