தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.