பாகிஸ்தான் – சியல்கோட் நகரில் ஏற்றுமதி முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர், தொழிற்சாலை ஊழியர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு இளைஞர்கள் பலரும் ஒன்றுகூடியிருக்கும் காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சியல்கோட் உள்ளிட்ட பாகிஸ்தானின் பன்ஜாப் மாநிலத்தின் பிரதான அமைச்சர் ஹுஸ்மான் புஸ்தார் இது மிகவும் துயரகரமான சம்பவம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பன்ஜாப் காவல்துறை அறிவித்துள்ளது.
இலங்கையர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வௌியிடப்படவில்லை.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.