கோட்டாபய ராஜபக்ஷ- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாட்டு மக்கள் இன்று பாரிய நெருக்கடிக்குள் உள்ள நிலையில், அதற்கு அரசாங்கத்திடம் இருந்து எவ்வித நிவாரணங்களும் இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தினால் எவ்வித பயன்களும் இல்லை. இந்தியாவில் இருந்து கிடைக்கும் கடன்வரியிலும் மோசடிகள் இடம்பெறுகின்றன.
எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுகளை பகி்ஸ்கரிப்பதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
பாரிய நெருக்கடிக்குள் உள்ள மக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பொம்மையாக செயற்பட்டு வருவதன் காரணமாக, நாடாளுமன்றினால் எவ்வித பயன்களும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
52 நாள் அரசாங்கத்தை போன்று செயற்பட்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டுள்ளார். அவர், பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதிலாக, பிரச்சினைகளை அறிவிக்கும் ஒருவராக மாறியுள்ளார்.
எனவே அரசாங்கம், குறுகிய காலத்துக்கேனும் தீர்வுகள் முன்வைக்காமை காரணமாக, இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்கட்சிகள் பகிஸ்கரிப்பதாக அவர் அறிவித்தார்.
இதற்கிடையில், இந்த அரசாாங்கம் அலங்கோல அரசாங்கம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதில் எவ்வித பயன்களும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார்
கொழும்பிலும் மலையகத்திலும் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார. மலையக பெருந்தோட்ட மக்களுக்கு பயிரிட காணிகளை தருவதாக கூறி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் செலவை மலையக பெருந்தோட்டங்களுக்கு கொடுத்தால், அந்த மக்களின் பசியை தீரக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற அமர்வுகளால் எவ்வித பயன்களும் இல்லையென்தால் நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிப்பதாக அவர் அறிவித்தார்
இந்த உரைகளை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் நாடாளுமன்றில் இருந்து வெளியேறிச் சென்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.