இத்தாலியில் மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் அருகில் உள்ளவர்களிடம் சத்தமாக கூச்சலிட்டு கூறியுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தனது உடலில் பேய் பீடித்துள்ளதாக கூறி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து பேய்க்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதான தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மிலான் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.