ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (22) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், நிதியமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகியோரை இதில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில், நேற்று (21) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.