மாமனாரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன், நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவேம்பு கிரான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சின்னவேம்பு கிரான் பிரதேசத்தைச் சோந்த 66 வயதுடைய பொடி எட்வேட் போஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்
நபரின் மகளுக்கும் மருமகனுக்கும் இடையே நேற்று பகல் வாக்குவாதம் ஏற்பட்டது. மகளை மருமகன் தாக்கியமையைக் கண்ட அவர் ஏன் தாக்குகிறாய் என கேட்டுள்ளார்.
அதனால் கோபமுற்ற மருமகன் அவர் தலை மீது பொல்லால் தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் .
இதனையடுத்து தாக்குதலை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.