மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்; எப்போது தெரியுமா?
ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள 200இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்ட உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து, அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.