வாகனங்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் மீண்டும் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், இணைய தளத்தில் ஊடாக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளில் ஊடாகவும் அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.