பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று(08) இடம்பெறவுள்ளது.
கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் நேற்று முன்தினம் (06) மாலை நாட்டை வந்தடைந்தது. உடல் எச்சங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், சடலம் சீல் செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட உடல், பிரியந்த குமார தியவடனவின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அதிகாலை 3 மணி முதல் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இவரது மரணம் குறித்து, பாகிஸ்தானில் 130 இற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.