தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்த ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராகவுள்ளதாகவும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு, தெரிவு செய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தாயரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள், இடைநிறுத்தப்பட்டு மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாடநெறிகளை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.