இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை, மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் மின்சார மீள் இணைப்பு பணிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்வதாக மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
எனினும், மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதுடன் 300 மெகா வோட் மின்சாரம் மீள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.