முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தேசபந்து தென்னகோனை காணவில்லை. அவர் கைது செய்யப்படாமல் தப்பித்து வருகிறார்.
எனவே, அவர் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால், பொதுமக்கள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்கவும்.
மேலும், நிலுவையில் உள்ள பிடியாணை இருந்தபோதிலும், முன்னாள் ஐஜிபி கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவிய எந்தவொரு நபரும் தண்டனைச் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் ஐஜிபியாக இருந்ததால் அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படாது என்றும், மற்ற சந்தேக நபர்களைப் போலவே நடத்தப்படுவார் என்றும்பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.