ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுப நேரத்தில் புதிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்தக்கூடிய சக்திமிக்க தலைவர் புத்தாண்டுக்கு பின்னர் அறிவிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். #Srilanka #SLnews #Lka #TamilNews #TamilMirror pic.twitter.com/NnAKQ7NAL9
— Tamil Mirror (@Tamilmirror) April 11, 2023