சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நாளை(04) முதல் நீக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதியில் இருந்து சிறைச்சாலை கைதிகள் உறவினர்களை சந்திப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும், முடிந்தவரை E-visit முறை மூலம் பார்வையிட வசதிகளை ஏற்படுத்துமாறும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.