இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம். வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.