புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
டிசெம்பர் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அமுலுக்குவரும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனப் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள் மண்டபக் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கில் அதாவது, 200 பேருக்கு மேற்படாத வகையில் உள்ளக நிகழ்வுகளிலும், வெளியக நிகழ்வுகளில் 250 பேரளவில் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.