மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 10 பேர் இதுவரையிலும் கையளிக்கவில்லை என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கெப்படிபொல மாவத்தையில் அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விவரங்களை வழங்க வேண்டுமென அரச சேவைகள், மாகாண, உள்ளூராட்சி மன்ற அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கே இவ்வாறு பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொண்டிருந்த 2 அமைச்சர்கள், 2 இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த இல்லங்களை மீள கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தனவும், இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, டீ.பீ.ஹேரத் ஆகியோர்களே இவ்வாறு கையளித்துள்ளனர்.
அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரையில் பெற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை எனவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.