கடும் காற்றுடன் கூடிய மழையால் பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 36 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு, மத்திய பிரிவு , சிங்காரவத்தை ஆகிய தோட்டபகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சமைத்த உணவும், தேவையான உதவிகளும் நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.