அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தபால் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்
இதற்கமைய நாடளாவிய ரீதியில் காணப்படும் 653 தபால் காரியாலயங்கள், மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் காரியாலயங்களின் பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன், இன்றைய வேலை நிறுத்த போராட்டத்திற்கு வங்கித் துறையினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதற்கமைய இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஏனைய வங்கி தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உரிமம் பெற்ற தனியார் வங்கிகளும் இன்றைய தினம் சேவைகளை மட்டுப்படுத்தி உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.