இலங்கையில் உள்ள தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தி, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அனமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலம், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வு வயதை 60 வரைக்கும் நீடிக்கப்படும்.
சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 வயது அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் உயர்ந்தபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கும் இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.