மித்தெனிய முக்கொலை தொடர்பில் தேடப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதுடைய குறித்த சந்தேக நபர் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக்கு உதவியதற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.