இலங்கை பெண் கொலை
சுவிட்ஸர்லாந்தின் – ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் சிற்றுண்டி ஒன்றை நடத்தி வந்த 47 வயதான இலங்கை பெண் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 57 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 57 வயதுடைய சந்தேகநபர் தனது 47 வயது மனைவியைக் கத்தியால் தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கன்டோனல் காவல்துறையின் கூற்றுப்படி, பல்வேறு தெளிவுபடுத்தல்கள் மற்றும் ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் , தடயவியல் விசாரணையும் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.